குற்றால அருவியில் உற்சாக குளியலில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக குற்றாலம் ஐந்தருவி, பழைய குற்றாலம் புலியருவி போன்ற அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர் விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. அருவிகளில் உற்சாகமாகக் குளித்து அவர்கள் மகிழ்கின்றனர்.

 

 

Exit mobile version