குற்றம் சாட்டப்பட்டவர் தான் கருத்து சொல்ல வேண்டும் – கமல்ஹாசன்

வைரமுத்து விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் தான் கருத்து சொல்ல வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் வைரமுத்து தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்துள்ளர். சிலைகடத்தல் விவகாரத்தில் கோயிலுக்கு சொந்தமான சிலைகள் நம்முடைய சொத்து என்றும், தமிழகத்தை சேர்ந்த அனைவரும் அதனை பாதுகாக்க வேண்டும் என்றார். ஆளுநர் விவகாரத்தில் தவறு இருக்கும் பட்சத்தில் அவர், பதவி விலக வேண்டியது தான் அழகு என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை அந்த பதவியில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் நீடிக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version