சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை இரண்டாயிரத்து 788 ஆக அதிகரிப்பு

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை இரண்டாயிரத்து 788 ஆக அதிகரிப்பு. சீனாவில் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. சீனா முழுவதும் 78 ஆயிரத்து 824 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை இரண்டாயிரத்து 788 பேர் பலியாகி உள்ள நிலையில், ஏழாயிரத்து 952 பேரின் உடல்நிலை மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் உடல்நலம் குணமடைந்து 36 ஆயிரத்து 117 பேர் மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் தென்கொரியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டாயிரத்து 22ஆக அதிகரித்துள்ளது.

Exit mobile version