காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தி விருது -தமிழக அரசு

கடலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவைச் சேர்ந்த ரா.வேதரத்தினம்,கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவை சேர்ந்த அ.பிரகாஷ் ஆகியோர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கோ.ராஜேந்திரன், திருச்சி மாநகர காந்தி மார்கெட் காவல் நிலைய தலைமைக் காவலர் மற்றும் மத்திய புலனாய்வு பிரிவில் அயல் பணியாற்றிய ரெ.திருக்குமார், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றிய பெ. கோபி ஆகியோருக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்க அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 26 -ம் தேதி குடியரசு தினத்தன்று இவர்கள் ஐந்து பேருக்கும் விருதினை வழங்கவுள்ளார்.

Exit mobile version