காணாமல் போன ஹரிணி குழந்தையை கண்டுபிடித்து கொடுத்தால் ஒரு லட்சம் பரிசு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் மானாமதி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன், காளியம்மாள் தம்பதியின் மகள்தான் ஹரிணி. நாடோடி இன தம்பதிகளான இவர்கள், பாசி மணி, ஊசிமணி விற்கப்போன இடத்தில் ஹரிணியைப் பறிகொடுத்துவிட்டு ஒரு மாதமாகக் கதறிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், “இந்த அப்பாவி தம்பதியின் இரண்டு வயது மகள் ஹரிணியைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு தருகிறோம்” என்று அறிவித்து, இந்தத் தம்பதிக்குப் உதவி செய்ய தன்னார்வலர்கள் அமைப்பு முன்வந்துள்ளது.

Exit mobile version