கவலை அளிப்பதாக ஆளுநர் தெரிவித்த கருத்து – ராஜ்பவன் புதிய விளக்கம்

 

துணை வேந்தர்கள் நியமனத்தில் பணப் பரிமாற்றம் நடந்ததாக ஆளுநர் குற்றம்சாட்டவில்லை என ராஜ்பவன் விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்து உள்ளது.

கல்வியாளர்கள் தெரிவித்த குற்றச்சாட்டின் பேரிலேயே ஆளுனர் கவலை தெரிவித்தார் என அதில் கூறப்பட்டுள்ளது. தனிப்பட்ட நபர்கள் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறவில்லை, பணபரிமாற்ற குற்றச்சாட்டு குறித்த ஆதாரம் ஆளுநரிடம் இல்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

Exit mobile version