கலப்பட நெய் தயாரித்து விற்பனை செய்த வீட்டிற்கு சீல்

சேலம் அன்னானப்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கலப்பட நெய் தயாரிப்பதாக உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சோதனை நடத்திய அதிகாரிகள், பிரபு என்பவர் வீட்டை வாடகைக்கு எடுத்து கலப்பட நெய் தயாரித்து விற்பனை செய்து வந்ததை கண்டுபிடித்தனர். பாக்கெட்டுகளில் ஊத்துக்குளியில் தயாரிக்கப்பட்ட சுத்தமான நெய் என்று குறிப்பிட்டு கடைகளுக்கு விநியோகம் செய்ததும் தெரிய வந்தது. அந்த வீட்டில் இருந்த பொருட்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள், கலப்பட நெய் தயாரித்த நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், தாதாகப்பட்டி பகுதியில் ஈஸ்வரன் என்பருக்கு சொந்தமான மளிகை கடையில் சோதனை செய்த உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Exit mobile version