கரூரில் பார்வையாளர்களை கவர்ந்த குதிரை வண்டி பந்தயம்

கரூர் அடுத்துள்ள பள்ளப்பாளையம் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் குதிரை பந்தயம்  நடைபெற்றது. இப்போட்டியில் 10க்கும் மேற்பட்ட குதிரைகள் கலந்து கொண்டன.

பள்ளப்பாளையம் கைகாட்டியில் துவங்கிய போட்டி, ஐந்து கிலோமீட்டர் தூரம் வரை சென்று திரும்ப வேண்டும் என்பது விதிமுறை. இதில் முதலில் வந்த நான்கு குதிரைகளுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டது.

இந்த  போட்டிக்கு கரூர் திருச்சி நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டியில் திருச்சி சமயபுரத்தை சேர்ந்த விநோத் முதல் பரிசையும், திண்டுக்கல்லை சேர்ந்த சாகுல் இரண்டாம் பரிசையும் , பேராவூரணியை சேர்ந்த உத்ரா வடிவேல் மூன்றாம் பரிசையும் தட்டிச்சென்றனர்.

Exit mobile version