கரூரில் தனியார் பள்ளியில் இருந்து 26 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூரில் தனியார் பள்ளியில் இருந்து 26 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். காக்காவாடி என்ற இடத்தில் செயல்பட்டு வரும் வேலம்மாள் பள்ளியில் இருந்து கடந்த 3ம் தேதி மர்ம நபர்கள் 26 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயைக் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து விசாரணை நடத்தி வந்த காவல்துறை, மூன்று தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வினோத்குமார், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த லட்சுமண பெருமாள் ஆகியோரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், கொள்ளை அடித்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர். அவர்களிடமிருந்து, 23 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்களை காவல்துறை பறிமுதல் செய்தனர்.

Exit mobile version