கருணாநிதிக்கு வெண்கலச் சிலை அமைக்க அனுமதி கேட்டு கடிதம்

கருணாநிதி மறைவுக்கு பின்பு திமுக தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்ட ஸ்டாலினுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் அழகிரி, கடந்த 5ம் தேதி சென்னையில் அமைதி பேரணி நடத்தினார். இந்தநிலையில், மதுரை மாவட்ட ஆட்சியருக்கு அழகிரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 10 கோடி தமிழர்களின் அன்பை பெற்ற கருணாநிதியின் மறைவை தாங்க முடியாமல் உண்மைத் தொண்டர்கள் கண்ணீர் வடித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மதுரையில் அவருக்கு சிலை அமைக்க இருப்பதாக அழகிரி குறிப்பிட்டுள்ளார். பால்பண்ணை அருகே உள்ள சந்திப்பில் கருணாநிதிக்கு வெண்கலச் சிலை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் அழகிரி கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Exit mobile version