கருணாநிதி நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சியில் மின் திருட்டு

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியினர் மின் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னையில் பல இடங்களில் மின்சார அலங்காரங்களை திமுக செய்திருந்தது. கருணாநிதியின் உருவ சிலை வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. சாலை முழுவதும் மின்சார விளக்குகளால் திமுகவினர் அலங்காரம் செய்திருந்தனர். திமுக ஆட்சிகாலத்தில் தமிழ்நாடே இருளில் மூழ்கி இருந்ததாக புகார் கூறப்படும்நிலையில், அதிமுக ஆட்சியில் தான் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக மாறி இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 

இந்தநிலையில், கருணாநிதியின் நினைவு தினத்தை அனுசரிக்க அதிக அளவிலான திமுகவினர் மின்சாரத்தை தாரளமாக செலவழித்துள்ளனர். சில இடங்களில் அனுமதியின்றி திருட்டுத்தனமாக மின்சாரத்தை திமுகவினர் பயன்படுத்தியுள்ளதாவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version