உலக தமிழர்களை காப்பாற்ற இருக்கும் ஒரே இயக்கம் அதிமுக – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

ஈரோட்டில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அதிமுக என்பது அறிஞர் அண்ணா மற்றும் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டது என்றும் ,ஈரோடு என்பது அதிமுகவின் கோட்டை என்று  குறிப்பிட்டார்.

புரட்சிதலைவி அம்மா அனைத்து பிரச்சனைக்களுக்கும் தீர்வு கண்டவர் என்றும் தெரிவித்தார்.

ஆனால், திமுக காங்கிரஸ் கட்சிகள்  ஈழத்தமிழர்களை கொன்று குவித்து நாடகமாடியதாகவும்,  அவர்களுக்கு புரிய வைக்கும் வகையில் நடப்பது தான் இந்த கூட்டம் தெரிவித்தார். 

மேலும் உலகத்தில் உள்ள தமிழர்களை காப்பாற்ற இருக்கும் ஒரே இயக்கம் அதிமுக என்றும் இந்த இயக்கம் இன்னும் நூறு  ஆண்டுகள் தாண்டியும் வாழும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Exit mobile version