உலக எய்ட்ஸ் ஒழிப்பு இன்று தினம் அனுசரிப்பு – தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பேரணி

உலக எய்ட்ஸ் ஒழிப்பு தினத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஆண்டுதோறும் டிசம்பர்1 ம் தேதி எய்ட்ஸ் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், விருதுநகரில் செவிலியர் பள்ளி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தொடங்கிய இந்த பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் மைதானத்தில் நிறைவடைந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.கருத்தரங்கில் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி சந்தோசம், மருத்துவ பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு இரத்த பரிசோதனை செய்து கொண்டனர்.

 

Exit mobile version