உதகை அரசு தாவரவியல் பூங்கா நுழைவு கட்டணம் மற்றும் சினிமா படப்பிடிப்பு கட்டணம் இன்று முதல் உயர்வு

உதகை அரசு தாவரவியல் பூங்கா நுழைவு கட்டணம் மற்றும் சினிமா படப்பிடிப்பு கட்டணம் இன்று முதல் உயர்ந்துள்ளதாக தோட்டக்கலைத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவிற்கு உள் மாவட்டங்கள் மட்டும் இன்றி வெளி மாநிலத்தவர்களும் நாள்தோறும் வந்து இயற்கை எழிலை ரசித்து வருகின்றனர். இந்தநிலையில், பூங்காவிற்குள் செல்ல நுழைவு கட்டணம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் இன்று முதல் நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுவரை பெரியவர்களுக்கு 30 ரூபாயாக இருந்தது, 40 ரூபாயாகவும், சிறுவர்களுக்கு 15 ரூபாயாக இருந்தது, 20 ரூபாயாகவும்,உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பூங்காவில் அவ்வப்போது தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களின் சினிமா படப்பிடிப்புகள் இந்த பூங்காவில் அவ்வப்போது நடைப்பெற்று வருகிறது. படப்பிடிப்புக்கு கட்டணம் 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

 

 

Exit mobile version