ஈச்சம்பாடி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு-முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தருமபுரி மாவட்டம் ஈச்சம்பாடி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கையை ஏற்று, தருமபுரி மாவட்டம் ஈச்சம்பாடி அணையில் இருந்து அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டு இருப்பதாக கூறியுள்ளார். இதன் மூலம் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 6 ஆயிரத்து 250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். நீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயிகள் உயர் மகசூல் பெற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Exit mobile version