இனி ஹெல்மெட் அணிவது கட்டாயம்! – உயர்நீதிமன்றம்

இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்பவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாகன ஓட்டிகளின் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் இருப்பது குறித்து அர்ஜூன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வாகன ஓட்டிகளின் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதற்காக அரசாணை வெளியிடுவதோடு, அது நடைமுறைப்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வரும் 23ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

   

 

Exit mobile version