இந்தியாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க பாஜக அரசு தவறிவிட்டது

பிரிட்டனின் லண்டன் நகருக்கு சென்றுள்ள ராகுல்காந்தி அங்குள்ள கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது, கலந்துரையாடலில் பேசிய ராகுல்காந்தி, மத்திய அரசின் கவனக்குறைவே டோக்லாமில் சீனப்படைகள் அத்துமீற வழிவகுத்ததாக குறிப்பிட்டார். டோக்லாம் பகுதியில் தற்போது சீன படைகள் முகாமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கட்டிப்பிடித்தல்களை அடிப்படையாக கொண்டு வெளியுறவுக் கொள்கைகளை செயல்படுத்த முடியாது என்று பிரதமர் மோடியை ராகுல் மறைமுகமாக விமர்சித்தார். இந்தியாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க பாஜக அரசு தவறவிட்டதாகவும், வேலையின்மையால் நெருக்கடியான சூழல் உருவாகி இருப்பதாகவும் ராகுல் தெரிவித்தார்.

Exit mobile version