இலங்கை தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கண்டனம்

இலங்கை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த தாக்குதல் சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தின் உச்சகட்டம் இந்த தாக்குதல் எனக் கூறியுள்ள ராகுல்காந்தி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version