இந்தியாவில் முதன் முறையாக ஆன்ட்ராய்டு செயலி மூலம் டீசல் விற்பனை கொளத்தூரில் துவக்கம்

இந்தியாவில் முதன் முறையாக ஆன்ட்ராய்டு செயலி மூலம் டீசல் விற்பனை சென்னை, கொளத்தூரில் துவக்கப்பட்டுள்ளது.

இந்திய ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் சார்பில் இந்த சேவை துவங்கப்பட்டுள்ளது. டீசல் விற்பனை சேவையை, இந்தியன் ஆயில் மாநில தலைமை அதிகாரி சித்தார்த்தன் தொடக்கி வைத்தார்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மாநில சில்லறை விற்பனை தலைமை அதிகாரி கோபால கிருஷ்ணன், வாடிக்கையாளர்கள் ஆன்ட்ராய்டு மொபைல் ஆப் மூலம் ஆர்டர் செய்யலாம் என்றும், வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்ததும், அவர்களுக்கு மொபைல் மூலமாக எஸ்.எம்.எஸ்.-ல் இ-பில் வழங்கப்படும் என்றார்.

தற்போது டீசல் மட்டுமே டெலிவரி செய்யப்படுவதாகவும், விரைவில் பெட்ரோல் விற்பனை சேவை கொண்டு வர திட்டம் உள்ளதாகவும் கோபால கிருஷ்ணன் கூறினார்.

Exit mobile version