இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. வெற்றி பெறும்-முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால் நாகரிகமுடன் நடந்து கொள்ள வேண்டும். நாகரிகமுடன் நடந்து கொள்ளவில்லை எனில் சட்டம் தன் கடமையை செய்யும் என்றார்.

அரசின் சாதனைகள் மக்களிடம் சென்றடைந்துள்ளதால் திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய 2 தொகுதிகளில் அ.தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு, தி.மு.க. அரசு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Exit mobile version