இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதி – ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சமுதாய வளைகாப்பு மற்றும் மகளிருக்கு இருசக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் இருப்பதாகக் கூறினார்.

இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதி எனத் தெரிவித்த அவர், தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவுக்கு வந்தால் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டார்.

Exit mobile version