ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்று மாயமான தூத்துக்குடியை சேர்ந்த 19 மீனவர்கள் பத்திரமாக வீடு திரும்பினர்.

ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்று மாயமான தூத்துக்குடியை சேர்ந்த 19 மீனவர்கள் பத்திரமாக வீடு திரும்பினர். தமிழக கடலோர பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்தது. இதைதொடர்ந்து, கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு கரை திரும்ப தகவல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தூத்துக்குடி தருவைகுளம் பகுதியில் இருந்து 2 விசைப்படகுகளில் சென்ற 19 மீனவர்கள் நடுகடலில் மாயமாயினர். இதைதொடர்ந்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இந்திய கடலோர காவல் படையினரின் 2 டார்ணியர் விமானங்கள் மூலம் கடலில் மாயமான மீனவர்களை தேடும் பணி கடந்த 2 நாட்களாக தீவிரமாக நடந்து வந்தது. இந்தநிலையில், மீனவர்கள் 19 பேரும் மாலத்தீவு அருகே நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பதை கடலோர காவல்படை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதைதொடர்ந்து அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு இன்று தருவைக்குளத்திற்கு அழைத்துவரப்பட்டு அனைவரும் வீடு திரும்பினர்.

Exit mobile version