ஆமாம், வீரர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் – பிரதமர் மோடி அதிரடி

நாட்டின் அமைதி, வளர்ச்சிக்கு இடையூறு கொடுப்பவர்களுக்கு வீரர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

மன் கீ பாத் நிகழ்ச்சியை ஒட்டி வானொலியில் உரையாற்றிய அவர், இந்தியா நடத்திய துல்லிய தாக்குதல் குறித்து பெருமிதம் தெரிவித்தார். நாட்டின் அமைதி, வளர்ச்சிக்கு இடையூறு செய்பவர்களுக்கு எப்போதும் இடமில்லை என்று எச்சரித்த பிரதமர், அவர்களுக்கு வீரர்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்றார்.

பேரிடர் கால மீட்பு பணிகளில் விமானப்படை சிறப்பாக செயல்பட்டு வருவதாக பாராட்டு தெரிவித்த அவர், காந்தியடிகளின் போதனை அனைத்து காலத்திற்கும் ஏற்றது என்று குறிப்பிட்டார். இறுதியாக, இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு அவர் இரங்கல் தெரிவித்தார்.

Exit mobile version