ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து- வலை வீசும் ராகுல்காந்தி

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவோம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் இருந்து சில பகுதிகளை பிரித்து தெலுங்கானா என்னும் தனி மாநிலத்தை உருவாக்க காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசு தீர்மானித்தது. இந்த நடவடிக்கையால் ஆந்திர மாநிலத்துக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளை சமாளிக்கும் வகையில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வாக்குறுதி அளித்திருந்தது.

ஆனால் தெலுங்கானா பிரிவினைக்கு பின்னர் நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தது.

இதையடுத்து ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ,பாஜக அரசிடம் கோரிக்கை வைத்தார்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டும் , மத்திய அரசு இன்னும் செவி சாய்க்கவில்லை.

இந்நிலையில், ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார்.அப்போது பிரதமர் மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து என்பது இம்மாநில மக்களின் அடிப்படை உரிமை என குறிப்பிட்டார்.வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றால், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தான் எங்கள் முதல் வேலையாக இருக்கும் என அவர் உறுதி அளித்தார்.

Exit mobile version