அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி, அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் மழையின் தாக்கம் குறைந்துள்ளது. இதனால், அருவிகளில் நீர்வரத்து சீராகி இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதால், சில இடங்களில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Exit mobile version