அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது -செங்கோட்டையன்

கோபிசெட்டிபாளையம் கரட்டடி பாளையத்தில் மாநில அளவிலான சதுரங்க போட்டியை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செங்கோட்டையன், இன்று மாலை நடைபெறும் அமைச்சரவை கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினார். இதில், பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை குறித்து பரிசீலிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா விருப்பப்படி அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version