அமிருதசரஸ் ரயில் விபத்து போராட்டம் கலவரமாக மாறியது – போலீசார் தடியடி

61 பேரை பலிகொண்ட ரயில் விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை கோரி, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பஞ்சாப் மாநிலத்தில் நேற்று முன்தினம் நேரிட்ட ரயில் விபத்தில் 61 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் கலவரமாக மாறியதை அடுத்து போலீசார் தடியடி நடத்தி, அவர்கள் விரட்டி அடித்தனர். தொடர் போராட்டம் மற்றும் வன்முறையை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகையை உயர்த்த வேண்டும் என்று, பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.

Exit mobile version