அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ரயில் பயணிகள்!

பீகாரில் ரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தர்பங்கா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட கொல்கத்தா எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்று பெட்டிகள் தடம்புரண்டன.

லெவல் கிராசிங்கில் இந்த விபத்து நேரிட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. ரயில் தடம் புரண்டது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Exit mobile version