அதிமுக ஆட்சியில் 140 சிலைகள் மீட்பு! – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பெருமிதம்

ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகளை அதிமுக அரசு மீட்டுள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பெருமையோடு தெரிவித்துள்ளார்.

சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப்பில் “நமக்கு நாம்” படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தமிழ் இருக்கை அமைக்க இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு 5 கோடி ரூபாய் நிதி கொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு இருக்கை அமையவிருக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

திமுக ஆட்சிக்காலத்தில் தமிழக கோயில்களில் இருந்து வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட சிலைகள் பெரும்பாலும் மீட்கப்பட்டு வருவதாகவும் பெருமையோடு நினைவு கூர்ந்தார். தற்போதுவரை, ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 140 சிலைகளை அதிமுக அரசு மீட்டுள்ளதாகவும் பெருமையோடு குறிப்பிட்டார். மேலும், மத்திய அரசு உதவியுடன், தமிழக அரசு மேலும் பல சிலைகளை மீட்டு வருவதாகவும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நம்பிக்கைத் தெரிவித்தார்.

Exit mobile version