அக்டோபர் 1ஆம் தேதி கேரளாவில் முழு அடைப்பு

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, அக்டோபர் 1ஆம் தேதி கேரளாவில் முழு அடைப்பு போராட்டத்துக்கு சிவசேனா அழைப்பு விடுத்துள்ளது.

கேரளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பளித்தது.

குறிப்பிட்ட வயது பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பது பெண்களுக்கு எதிராக காட்டப்படும் பாரபட்சம் என்றும், இது இந்து பெண்களுக்கான உரிமை மறுப்பு என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்தனர்.

5 நீதிபதிகளில் நான்கு பேர், பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டாலும், அமர்வில் இடம் பெற்றிருந்த ஒரே பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.

இந்நிலையில் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க சிவசேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதை கண்டிக்கும் வகையில் அக்டோபர் 1ஆம் தேதி கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்த சிவசேனா அழைப்பு விடுத்துள்ளது.

Exit mobile version