ஸ்டாலின் தன்னை முதல்வராக பறைசாற்றி வருகிறார் – அமைச்சர் கே.பி.அன்பழகன்

ஈழத்தமிழர்கள் மரணத்திற்கு காரணமான திமுக, காங்கிரஸ் கட்சிகளை தருமபுரியில் நடைபெற்ற அதிமுக கணடன பொது கூட்டத்தில், அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பேசினார். 

போர்குற்றவாளிகளான திமுக,காங்கிரஸை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும், இலங்கை போரின் போது தமிழகத்தில் உண்ணாவிரதம் என்ற பெயரில், மக்களை ஏமாற்றி கபட நாடகம் நடத்தியவர் கருணாநிதி என்வும் கூறினார்.

கருணாநிதி மறைந்த பிறகு, திமுக தலைவராக ஸ்டாலின் இருக்கும் போதே முதல்வராக பறைசாற்றி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். கடந்த 2016 ஆம் ஆண்டு அம்மா கொடுத்த வாக்குறுதிகளை அம்மாவின் அரசு நிறைவேற்றி வருவதாகவும், தெரிவித்தார்.

ஒகேனக்கலில்,வரும் உபரி நீரை ஏரி,குளங்களுக்கு கொண்டு செல்ல 340 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,இதை முதல்வரிடம் பரிசீலனை செய்து இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கே.பி. அன்பழகன் குறிப்பிட்டார்.

Exit mobile version