வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

மனித குலத்திற்கு உதவும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான வேதியியல் கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

பிரான்சஸ் ஹெச். அர்னால்டு, ஜார்ஜ் பி. ஸ்மித், சர் கிரிகோரி பி வின்டர் ஆகிய 3 பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 

3 பேரில் பிரான்சஸ் அர்னால்டு என்ற பெண், வேதியியலுக்கான நோபல் பரிசு பெறும் 5 வது பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மற்றொரு வெற்றியாளரான ஜார்ஜ் பி. ஸ்மித், மிசோரி பல்கலைக்கழத்திலும், சர் கிரிகோரி பி.வின்டர் Cambridge இல் உள்ள Molecular Biology ஆய்வகத்திலும் பணியாற்றுகின்றனர். 

 

Exit mobile version