விரக்தியில் டிடிவி தினகரனை திட்டும் தங்க தமிழ்செல்வன்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு ஒட்டுமொத்த டிடிவி தினகரன் ஆதரவாளர்களை விரக்தியின் உச்சிக்கே தள்ளியுள்ளது. மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கி விட்டோமோ? ஆலமரம் போன்ற அதிமுகவை தினகரன் என்னும் மாயாவியை நம்பி எதிர்த்து விட்டோமோ? என்ற மனக்குமுறலுடன் பொருமுகின்றனர்.

இதுவரை தங்களுக்குள் கோபத்தை காட்டிக் கொண்டு வந்த 18 எம்எல்ஏக்களும் தற்போது வெளிப்படையாகவே தினகரனை விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர். இதற்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார், டிடிவி தினகரனின் ஆதரவாளர்களில் முக்கியமானவரான தங்கதமிழ்செல்வன்.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிவந்த உடனே தங்கதமிழ்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்று செய்தியாளர்கள் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினர். டிடிவி தினகரன் மீதான கோபத்தை செய்தியாளர்களிடம் காட்டிய தங்கதமிழ்செல்வன், மேல்முறையீடோ, தேர்தலோ, நாசமா போறமோ என்று பொரிந்து தள்ளிவிட்டார். இது தங்கதமிழ்செல்வன் என்ற ஒருவரின் கோபம் மட்டும் அல்ல, ஒட்டுமொத்த 18 எம்எல்ஏக்களின் கோபம் என்று கூறுகின்றனர் விஷயம் அறிந்தவர்கள்.

 

Exit mobile version