ராஜீவ் காந்தி சிலைக்கு திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 72வது பிறாந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. சென்னை சின்னமலை பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர், ராஜீவ் காந்தி இந்திய தலைவராக மட்டுமில்லாமல் உலக தலைவர்கள் வரிசையில் இருந்தவர் என்று கூறினார். தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை கொண்டு வருவதாக காங்கிரசின் லட்சியம் என்று அவர் தெரிவித்தார்.

 

 

Exit mobile version