முதலில் இலங்கை கடற்படை! இப்போது கடற் கொள்ளையர்கள்!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆறுகாட்டுத்துறை அருகே நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தினர். படகுகளில் இருந்த மீன் மற்றும் வலைகளையும் அவர்கள் அபகரித்து சென்றனர்.

கொள்ளையர்களின் தாக்குதலில் படுகாயம் அடைந்த கந்தவேல், முருகானந்தம், தமிழ்செல்வன் ஆகியோர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடற்கொள்ளையர்கள் இந்திய எல்லைக்குள் நுழைவதை தடுக்க கடலோர காவல் படையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version