முதலமைச்சரின் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து

பகவத் கீதை மூலம் மனித வாழ்க்கையின் நெறியை உலகுக்கு உணர்த்திய பகவான் மகா விஷ்ணு, கிருஷ்ணராக அவதரித்த திருநாளை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடும் மக்கள் அனைவருக்கும், தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக அறிக்கையொன்றில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இத்திருநாளில், பகவத் கீதை போதித்த கடமையின் சிறப்பையும், பயன் கருதாப் பணியின் உயர்வையும் மக்கள் அனைவரும் மனதில் நிறுத்த வேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கடமை உணர்வுடனும், மகிழ்வுடனும் வாழ வேண்டுமென்று முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Exit mobile version