மிலாது நபியையையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

மிலாது நபியையையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் மிலாது நபி விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பிறருக்கு உதவுபவன், பிறரை மன்னிப்பவன் ஆகியோருக்கு இறைவன் இரங்குவான் என கூறியுள்ளார்.

தன்னிடம் உள்ளது தண்ணீரேயானாலும் பிறருக்கு கொடுத்து உதவுவது போன்ற நபியின் போதனைகளை பின்பற்றி வாழ்ந்தால், உலகில் அன்பும் அறனும், மகிழ்ச்சியும் தழைத்தோங்கும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அம்மாவின் வழியில் ஹஜ் புனித பயணம் செல்ல ஆண்டுக்கு 6 கோடி ரூபாய் மானியம் வழங்குவதாக பெருமிதம் தெரிவித்த அவர், அன்பு நிறைந்து சகோதரத்துவம் பெருக இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

Exit mobile version