முதலமைச்சர் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து

உலகில் அன்பும் அமைதியும், மகிழ்ச்சியும், பெருகி அனைவரும் நலமுடன் வாழ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கிருஷ்ணர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தி அன்று, மக்கள் தங்கள் இல்லங்களில் வண்ண கோலங்களிட்டு மாவில் நனைத்த குழந்தைகளின் பிஞ்சு காலடிகளை இல்லங்களில் பதித்து கிருஷ்ணரை வரவேற்பதாக போற்றி வணங்குவர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இத்திருநாளில் உலகில் அன்பும் அமைதியுடன் மகிழ்ச்சி பெருக வாழ்த்துவதுடன் மக்கள் அனைவரும் எல்லா நலன்களோடும் வளங்களோடும் வாழ்ந்திட வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version