மதுரையில் நாளை அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலையொட்டி மதுரையில் நாளை நடைபெறவுள்ள அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்கவுள்ளதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலையொட்டி மதுரை புறநகர் மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம், விரகனூர் சுற்றுச்சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நாளை நடைபெறவுள்ளதாக கூறினார்.

இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக கூறினார். மேலும் தமிழக அமைச்சர்களும் பங்கேற்கவுள்ளதாக கூறினார்.

அக்டோபர் 11 -ம் தேதி திருப்பரங்குன்றத்தில், தமிழக அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

Exit mobile version