புல்லட் நாகராஜன் கொலை மிரட்டல்

கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர் தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தைச் சேர்ந்த புல்லட் நாகராஜன். சிறைத்துறை எஸ்.பி ஊர்மிளாவுக்கு, வாட்ஸ் ஆப் மூலம் நாகராஜன் விடுத்த கொலை மிரட்டல் வைரலாகி பரவி வருகிறது. இது குறித்து மதுரை மாநகர் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாத்திடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டு புல்லட் நாகராஜனை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேனியில் அவர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர். இதனிடையே, பெரியகுளம் தென்கரை பெண் இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கும் நாகராஜன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். வாட்ஸ் ஆப் மூலம் அவர் மிரட்டிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

Exit mobile version