சேலத்தில் மணல் திருட்டை தடுக்க சென்ற வருவாய் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்

 

சேலத்தில் ஆற்று மணல் திருட்டை தடுக்கச் சென்ற வருவாய் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம்,காடையாம்பட்டி சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள சரபங்கா நதியில் இருந்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மணலை திருட்டுத் தனமான அள்ளிச் செல்வதாக வருவாய் ஆய்வாளர் ராஜலட்சுமிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் ஆய்வாளருக்கு மணல் அள்ளுபவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் மணல் திருட்டில் ஈடுபட்ட கார்த்தி மற்றும் பழனிவேல் ஆகியோரை தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்தனர். மணல் அள்ள பயன்படுத்திய டிப்பர் லாரி, டிரக்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய சதிஸ் என்பரை தேடி வருகின்றனர்.

Exit mobile version