விவசாய நிலங்களில் அமமுக ஒன்றிய செயலாளர் மணல் திருட்டு

முதுகுளத்தூர் அருகேயுள்ள பட்டா நிலங்களில் நடைபெற்று வரும் மணல் திருட்டை தடுக்க வேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள கொழுந்துரை கிராமத்தில் வசித்து வருபவர் சரவணன், இவர் அமமுகவில் ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார். இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் ஆட்களை வைத்து சவுடு மண் மற்றும் மணல்களை அவர் கொள்ளை அடித்து வருகிறார். இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர். எனவே மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Exit mobile version