பங்குச்சந்தையில் ரூ.3.62 லட்சம் கோடி இழப்பு

இந்த வாரத்தில் கடந்த திங்கள்கிழமை வர்த்தகம் துவங்கியதில் இருந்து 3 நாட்களில் மும்பை பங்குச்சந்தையில் 970 புள்ளிகள் வீழ்ந்துள்ளது. இதுபோன்று, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த மூன்று நாட்களில் நிஃப்டி 280 புள்ளிகளை இழந்துள்ளது.

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அமெரிக்கா – சீனா இடையே நிகழ்ந்து வரும் வர்த்தகப்போரும் இந்திய பங்குச்சந்தை பாதிப்புக்கு காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version