3-வது நாட்களாக தொடர்ந்து உச்சத்தை தொட்ட சென்செக்ஸ், நிஃப்டி

இந்திய பங்குச் சந்தைகள் 3-வது நாளாக இன்றும் உச்சத்துடன் நிறைவடைந்தன.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றன. அதன்படி, இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 66 புள்ளிகள் உயர்ந்து 39 ஆயிரத்து 749-க்கு முடிவடைந்தது. இதே போன்று தேசிய பங்குச்சந்தையான நிஃப்டியும் 50 புள்ளிகள் அதிகரித்து 11 ஆயிரத்து 928 புள்ளிகளில் நிறைவு பெற்றது. பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவதால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version