நடிகை தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் திருமண தேதி அறிவிப்பு

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான ரன்வீர் சிங், தீபிகா படுகோனே இருவரும் காதலித்து வந்தனர். அவர்களது திருமண ஏற்பாடுகளை இரு வீட்டாரும் தீவிரமாக செய்து வரும் நிலையில், திருமணத் தேதியை தீபிகா படுகோனே தனது இன்ஸ்டகரமில் வெளியிட்டுள்ளார். அதன்படி, நவம்பர் 14,15 ஆகிய தேதிகளில் திருமண நிகழ்வுகள் நடைபெறும் என அறிவித்துள்ளார். ”கேலியான் கீ ராஸ்லீலா” படத்தில் நடித்த போது ரன்வீர் – தீபிகா காதலிப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. பின்னர் ”ராம் லீலா” படத்தில் இணைந்து நடித்த போது இருவரின் காதலும் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது இன்ஸ்டகரமில் தீபிகா படுகோனே தன்னுடைய திருமண தேதியை அறிவித்திருக்கிறார்.

Exit mobile version