News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் பருவமழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் – ஆட்சியர் தகவல்

Web Team by Web Team
October 6, 2018
in மாவட்டம்
Reading Time: 1 min read
0
திருவள்ளூர் மாவட்டத்தில் பருவமழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் – ஆட்சியர் தகவல்
Share on FacebookShare on Twitter

திருவள்ளூர் மாவட்டத்தில் பருவமழை பாதிப்புக்களை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் மகேஷ்வரி ரவிக்குமார் கூறியதாவது:-

வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளது. இதனால் மாவட்டத்தில் ஏற்படும் பாதிப்புகளையும், அசம்பாவிதங்களையும் தடுக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 8 வட்டங்கள், 48 பிர்க்காவில் உள்ள ஒவ்வொரு வார்டு வாரியாகவும், கிராமங்களிலும் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் அதிக பாதிப்புகள் ஏற்படும் பகுதியாக 39 பகுதிகளும் மிதமான பாதிப்பு ஏற்படும் 8 இடங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

பேரிடர் தாக்குதலுக்குள்ளாகும் பகுதிகளின் விவரங்கள், பேரிடர் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றுவதற்கான வழிமுறைகள், போக்குவரத்து தடங்கள், மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான இடங்கள் போன்றவை தயார் நிலையில் உள்ளன. மண்டல, வட்டார அளவில் 64 குழுக்களும், மாவட்ட அளவில் பேரிடர் மீட்புப் படையினர் பொன்னேரியில் 42 குழுக்களும், கும்மிடிப்பூண்டி பகுதியில் 22 குழுக்களும், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 5 குழுக்களும் எப்போதும் தயார் நிலையில் இருப்பார்கள்.

உடைப்புகளை தடுக்கும் வகையில் மணல் மூட்டைகள் தயாராக உள்ளன. பொக்லைன் இயந்திரங்கள், மரம் அறுக்கும் கருவி, தண்ணீர் உறிஞ்சும் இயந்திரங்கள், குடிநீர் லாரிகள், ஜெனரேட்டர், கொசு மருந்து புகை தெளிப்பான், பிளீச்சிங் பவுடர், குளோரின், மின்கம்பங்கள், மின் மாற்றிகள், தற்காலிக தங்கும் வளாகங்கள் ஆகியவையும் தயார்நிலையில் உள்ளன. மழைக்காலத் தொற்று நோய்களைக் கண்காணிக்கும் வகையில் 42 மருத்துவக் குழுக்களும் தயாராக உள்ளன.

உணவுப் பொருள் வழங்கல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவு சங்கங்கள் ஆகிய துறைகள் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருள்களான அரிசி, கோதுமை மற்றும் மண்ணெய் ஆகியவை 3 மாதங்களுக்கு தேவையான அளவுக்கு இருப்பு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரச் சீர்கேடுகளை சமாளிக்க மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்துகள் கூடுதலாக இருப்பில் உள்ளது. பெருமழையால் பாதிக்கப்படுவோரை பாதுகாக்க 108 ஆம்புலன்ஸ் மற்றும் வேன்களும் தயாராக இருக்கிறது. எனவே, பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்.” இவ்வாறு ஆட்சியர் கூறினார்.

Tags: CollectorMaheswariThiruvallurTNRain
Previous Post

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து அலுவலர்களும் முன்னெச்சரிக்கை பணியில் ஈடுபட வேண்டும் – மின்துறை அமைச்சர் பி. தங்கமணி

Next Post

கால்நடைகளின் நலன் கருதி கிராமங்கள் தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள் – அமைச்சர் துரைக்கண்ணு

Related Posts

சூறைக்காற்று அடித்ததால் பறந்த பேருந்தின் மேற்கூரை! திருவள்ளூரில் பரபரப்பு!
தமிழ்நாடு

சூறைக்காற்று அடித்ததால் பறந்த பேருந்தின் மேற்கூரை! திருவள்ளூரில் பரபரப்பு!

May 30, 2023
திருவள்ளூரில்.. மாணவர்கள் இடையே மோதல்.. ஒரு மாணவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.. விடியா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?
அரசியல்

திருவள்ளூரில்.. மாணவர்கள் இடையே மோதல்.. ஒரு மாணவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.. விடியா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?

March 31, 2023
திருவள்ளூர்..தேர்வு எழுத வந்த மாணவிகளை குரங்குகள் துரத்துவதால் அவதி..!
தமிழ்நாடு

திருவள்ளூர்..தேர்வு எழுத வந்த மாணவிகளை குரங்குகள் துரத்துவதால் அவதி..!

March 14, 2023
ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க அதிமுக கவுன்சிலர்கள் வலியுறுத்தல்!
தமிழ்நாடு

ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க அதிமுக கவுன்சிலர்கள் வலியுறுத்தல்!

February 14, 2023
எட்டு கடைகளில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை !
தமிழ்நாடு

எட்டு கடைகளில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை !

February 11, 2023
சமூகவிரோதிகளின் கூடரமாக மாறிய சமுதாய கூடம், விளையாட்டு திடல்!
தமிழ்நாடு

சமூகவிரோதிகளின் கூடரமாக மாறிய சமுதாய கூடம், விளையாட்டு திடல்!

February 10, 2023
Next Post
கால்நடைகளின் நலன் கருதி கிராமங்கள் தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள்  – அமைச்சர் துரைக்கண்ணு

கால்நடைகளின் நலன் கருதி கிராமங்கள் தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள் - அமைச்சர் துரைக்கண்ணு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version