திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நேருக்கு நேர் சந்திக்கத் தயாரா? ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் சவால்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா டாக்டர்.எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவை வலிமை மிக்க கோட்டையாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கட்டமைத்துள்ளதாக தெரிவித்தார். எந்த சக்தியாலும் அம்மாவின் ஆட்சியை அசைத்துக்கூட பார்க்க முடியாது என்று அவர் கூறினார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பொய் புகார் கூறினால் நீதிமன்றத்தை நாடுவோம் என அவர் குறிப்பிட்டார். ஆட்சி கலையும் வரை தூங்கமாட்டேன் என கூறிய மு.க.ஸ்டாலின் வாழ்க்கை முழுவதும் தூங்க முடியாது என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார் .

Exit mobile version