News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home தமிழ்நாடு

தமிழக அரசின் முயற்சியால் புத்துயிர் பெற்று வரும் பறவைகள் சரணாலயம்

Web Team by Web Team
September 22, 2018
in தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
தமிழக அரசின் முயற்சியால் புத்துயிர் பெற்று வரும் பறவைகள் சரணாலயம்
Share on FacebookShare on Twitter

 

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பகுதியில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் நான்கரை கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ளது வெள்ளோடு பறவைகள் சரணாலயம்.

இந்த சரணாலயத்தில் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பறவைகளுக்கான சீசன் தொடங்கும். இந்த காலத்தில் உள்நாட்டு பறவைகள் மட்டுமின்றி சைபீரியா, நியூசிலாந்து, ரஷியா, ஆஸ்திரேலியா என பல்வேறு நாடுகளின் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வருகின்றன.

இந்த பறவைகள் சரணாலயத்திற்கு வரும் பொதுமக்கள், செம் பருந்து, வால் காக்கை, பூ நாரை, பஞ்சுருட்டாண், வண்ண நாரை, காஸ்பியன் ஆலா, வெண் புருவ சின்னான்,வெள்ளை ஆலா, கருங்கழுத்து நாரை, மீன் கொத்தி, சிறிய பச்சை பஞ்சுருட்டான், மரங் கொத்தி, ஆலா, மாங்குயில் உள்ளிட்ட பறவைகளை கண்டு ரசித்து செல்வது வழக்கம்.

இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக சரணாலயத்துக்கு அருகே உள்ள ஏரி வறண்டு போனது. இதன்காரணமாக பறவைகளின் வருகை குறைந்ததாக தெரிகிறது. இந்நிலையில், ஏரியின் புனரமைப்பு பணிகளுக்காக தமிழக அரசு சுமார் 2 கோடியே 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, பணிகளை துவக்கியது. இதனிடையே பவானிசாகர் அணை நிரம்பியதால், அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் தற்போது பறவைகள் சரணாயலம் அருகே உள்ள ஏரி கடல் போல் காட்சியளிக்கிறது.

இந்தநிலையில் ஏரியை ஆழப்படுத்துவது, ஏரியை சுற்றி புதியதாக கரைகள் அமைப்பது, பழைய கரைகளை புனரமைப்பு செய்து கரைகளை உயரப்படுத்துவது மற்றும் பறவைகள் வந்து ஓய்வு எடுக்கும் வகையில் புதியதாக கருங்கற்களை கொண்டு ஏரியின் நடுவில் மரங்களை நட்டு மணல் மேடுகள் ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகள் முடிவடைந்தவுடன் பறவைகள் சரணாலயத்தின் ஏரியில் படகுகள் இல்லம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும், அனைத்து பணிகளும் நிறைவடைந்தவுடன் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் புதிய சுற்றுலாத்தலமாக விளங்கும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசின் இந்த முயற்சி விவசாயிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை எற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு வழக்கம் போல் பறவைகள் வெள்ளோடு சரணாலயத்துக்கு வந்து சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்து படைக்கும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: Birds sanctuaryErode
Previous Post

சதாம் உசேனுக்கு நேர்ந்த கதி தான் நேரிடும் – ட்ரம்புக்கு ஈரான் அதிபர் எச்சரிக்கை

Next Post

திருப்பதியில் குவிந்த பக்தர்கள் – தள்ளுமுள்ளு

Related Posts

திமுக அரசின் துரோகத்தை இடைத்தேர்தலில் அம்பலப்படுத்துவோம் !
அரசியல்

திமுக அரசின் துரோகத்தை இடைத்தேர்தலில் அம்பலப்படுத்துவோம் !

February 11, 2023
200 பெண்களுக்கு மேல் பணம் தருகிறார்கள் 200 ரூபாய் உபிக்கள்!
அரசியல்

200 பெண்களுக்கு மேல் பணம் தருகிறார்கள் 200 ரூபாய் உபிக்கள்!

February 10, 2023
இடைத்தேர்தல் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டம்!
அரசியல்

இடைத்தேர்தல் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டம்!

February 9, 2023
சாதாரண மக்களின் தேவையை நிறைவேற்றிய இயக்கம் அதிமுக – முன்னாள் அமைச்சர் காமராஜ்
அரசியல்

சாதாரண மக்களின் தேவையை நிறைவேற்றிய இயக்கம் அதிமுக – முன்னாள் அமைச்சர் காமராஜ்

February 8, 2023
கூட்டணி கட்சியினர் கோஷமிட்டதால் பரபரப்பு !
அரசியல்

கூட்டணி கட்சியினர் கோஷமிட்டதால் பரபரப்பு !

February 6, 2023
அதிமுக வேட்பாளரை பொதுக்குழுவே இறுதி செய்ய வேண்டும்!
அரசியல்

அதிமுக வேட்பாளரை பொதுக்குழுவே இறுதி செய்ய வேண்டும்!

February 4, 2023
Next Post
திருப்பதியில் குவிந்த பக்தர்கள் – தள்ளுமுள்ளு

திருப்பதியில் குவிந்த பக்தர்கள் - தள்ளுமுள்ளு

Discussion about this post

அண்மை செய்திகள்

இரஷ்ய அதிபர் புதினுக்கு கைது வாரண்ட்..சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை..!

இரஷ்ய அதிபர் புதினுக்கு கைது வாரண்ட்..சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை..!

March 21, 2023
ஆஸ்கார் வென்ற The Elephant whisperers மற்றும் இசையமைப்பாளர் கீரவாணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து!

யுகாதி திருநாளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து..!

March 21, 2023
மகளிர் ப்ரீமியர் லீக் : மும்பை இந்தியன்ஸை துவம்சம் செய்த டெல்லி கேப்பிடல்ஸ்!

மகளிர் ப்ரீமியர் லீக் : மும்பை இந்தியன்ஸை துவம்சம் செய்த டெல்லி கேப்பிடல்ஸ்!

March 21, 2023
கவிதையே…தெரியுமா..?..உலக கவிதைகள் தினம் இன்று..!

கவிதையே…தெரியுமா..?..உலக கவிதைகள் தினம் இன்று..!

March 21, 2023
சர்வதேச காடுகள் தினம்..ஏன் கொண்டாடப்படுகிறது? எதற்காக.?

சர்வதேச காடுகள் தினம்..ஏன் கொண்டாடப்படுகிறது? எதற்காக.?

March 21, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version