ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

 

பந்திபோரா மாவட்டத்தில் சும்லார் அருகே உள்ள வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நிகழ்த்தினர். இருதரப்புக்கும் இடையே நீண்ட நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். தற்போது அங்கு சண்டை ஓய்தநிலையில், அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

Exit mobile version