கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகள் !

ராணிப்பேட்டை அருகே கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட திமுக நிர்வாகி மற்றும் அவரது தந்தையை கைது செய்ய காவல்துறையினர் தயங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்தல் முன் விரோதம் காரணமாக, சோளிங்கர் நகராட்சிக்குட்பட்ட எசையனூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் வீட்டிக்கு குடிநீர் இணைப்பு வழங்க கூடாது என திமுக கவுன்சிலர் கணேசன் மற்றும் அவரது மகன் திமுக நகர துணைத் தலைவர் தணிகை பெருமாள் ஆகியோர் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது இருவரும் ஆறுமுகத்தை கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Exit mobile version